Wednesday, September 30, 2009
Friday, May 1, 2009
இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்
இப்புகைப்படத்தை முழுமையாக காண, அதன் மீது சொடுக்கவும்....
பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.
இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.
புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.
Thursday, April 30, 2009
சிங்கள இனவெறி - ஜ.நா எடுத்த இரகசிய படங்கள்
Monday, April 27, 2009
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு
Tuesday, April 21, 2009
ஈழத்தில் இன்று மட்டும் (20/04/2009) 1500 க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்...
பல்லாயிரம் தமிழர்கள் படுகாயம் அடைந்தனர்....
இந்த கோரகாட்சிகளில் சில....
Saturday, April 18, 2009
தேசிய தலைவர் பற்றி அருத்த்தந்தை ஜகத் கஸ்பார்
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம்
வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.
மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.
பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார். என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'. உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக் கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.
உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.
உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், "பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார். ""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.
புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.
இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரி தாகத் தெரியாது. வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.
எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின் னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்க ளாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட் டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.
"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.
""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை. உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக் கிறேன்.''
அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.
கடந்த இதழைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் கவலையோடு கேட்டனர். இவற்றையெல்லாம் இப்போது சொல்வ தால் உங்களுக்கு நாளை பிரச்சனைகள் வராதா என்று. நானோ, காலங்கடந்து எழுதுகிறேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறேன். எதைப்பற்றிய அச்சமும் எனக்கு இன்று இல்லை. நான் தமிழன், எனது இனம் உலகின் மிகப்பழமையான, உயர்ந்த பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட ஒப்பிலா இலக்கியங்கள் படைத்த, சுயமரியாதை கொண்ட, எட்டுகோடி உயிர்களைக்கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய மக்கள் இனம் என் இனம். என் இனத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றழித்து, இன்று மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களை முல்லைத்தீவில் உயிரோடு புதைத்துவரும் கிராதக சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினரும், பெரும் உலக சக்திகளும் என் இனம் சார்ந்த அம்மக்களின் போராட்டத்தை "பயங்கரவாதம்' என முத்திரை குத்துவது என் இனத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும். குறைந்தபட்சம் என்னால் ஆனது அச்சமில்லா எதிர்குரல். ஒலிக்கும் எது வரினும்.
"இந்தியாவை ஏன் நீங்கள் பகைத்துக்கொண்டீர்கள்?' என்ற கேள்வியைத் தொடர்ந்து "கலைஞரையும் பல தருணங்களில் நீங்கள் காயப்படுத்தினீர்களே...' என்றேன்.
""இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் கலைஞர். நாங்கள் எல்லோரும் கலைஞரின் உரைகள் கேட்டு தமிழுணர்வில் ஊறியவர்கள். யாழ்ப்பாணம் சென்று பாருங்கள் கலைஞரின் உரைகள் அடங்கிய கேசட்டுகள் இல்லாத கடைகளை நீங்கள் பார்க்க முடியாது. சில சூழ்நிலைகள் அவர் மனம் வருந்தும்படி அமைந்திருக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரிய தலைவர். நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்...
(தொடரும்)
-நன்றி : http://tamilskynews.com/
Friday, April 17, 2009
Friday, March 27, 2009
ராஜீவ் காந்தி படுகொலை : பலிகடா ஆக்கப்படும் தமிழினம்
அந்த ஆட்டை போலத்தான் இன்று தமிழினமே பலி வாங்கப்படுகிறது.
நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கும் பல பேருக்கு இலங்கையில் நம் தொப்புள் கோடி உறவுகளான ஈழத்தமிழர்களின் மீது இலங்கை பேரினவாத பயங்கரவாத அரசின் இராணுவத்தால் நடத்தப்படுகிற இன அழிக்கும் போர் உண்மையிலேயே இந்திய அரசால் தான் நடத்தப்படுகிறது என்ற உண்மை தெரியாது....
ஆனால் உண்மை அது தானே... இந்தியாவில் இருந்து செல்லும் பல விதமான அதிநவீன, அதிபயங்கர துப்பாக்கிகளும் அணுகுண்டுகளும், பீரங்கிகளும், போர் விமானங்களும் உளவு பார்க்கும் ராடார்களும் தான் நம் தொப்புள் கோடி உறவான ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொல்கிறது. போதாதென்று அதிநவீன ராணுவ கருவிகள் அனைத்தையும் தருவதால், அவற்றை இயக்க திறமை வாய்ந்த ராணுவ அதிகாரிகளையும் சேர்த்து அனுப்புகிறதே ....
சரி, இதற்க்கு சாட்சியம் என்ன?
ஆத்திரத்தில் குற்றம் செய்பவன் தான் சாட்சி விட்டு செல்வான்....
இந்திய அரசோ பார்ப்பனிய குள்ள நரித்தனத்தை தன்னுள்ளே முழுமையாக இருத்திக்கொண்டு இச்செயல்கள் அனைத்தையும் செய்கிறது....
நமக்கு கிடைக்கின்ற ஒரு சில சாட்சிகள் போதுமே....
From Thamizhan Sundara |
ஜனவரி மாதம் தமிழகத்தின் வழியாகவே அதிபயங்கர பீரங்கிகள் சென்றன.
ஒரு நான்கு அல்லது அய்ந்து மாதங்களுக்கு முன்னர் நமது மறவர்களால் நடத்தப்பட்ட ஒரு இலங்கை இராணுவ தளத்தின் மீதான ஒரு தாக்குதலில் இறந்தவர்களில் மூவர் இந்திய இராணுவத்தில் பணி புரிந்த விஞ்ஞானிகள் - ஒருவர் வங்காளத்தை சேர்ந்தவர் ஒருவர் ஒரிசாவை சேர்ந்தவர் ஓருவர், மற்றவர் ஆந்த்ராவை சேர்ந்தவர்.
பெப்ருவரி மாதம் கூட முன்னூறுக்கும் அதிகமான இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் புனே வில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஈழத்தில் நம் தமிழ் மக்களை அழிக்க செல்லும் இந்திய ராணுவம், அங்கு பெருமளவில் சேதத்தை அடைந்து நிறைய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. அப்படி கொல்லப்படும் இந்திய ராணுவ வீரர்களின் உடல்கள் பெருமளவில் வரும்பொழுது, அவைகள் விமானங்கள் மூலம் அஸ்ஸாம் அல்லது காஷ்மீர் கொண்டு செள்ளப்ப்படுமாம்.(அடுத்தநாட்டு பிரச்சனைக்கும் புகுந்து அடிவாங்கி வருகிறார்கள் என்று சொல்வதை விட சொந்த நாட்டுக்காக உல்பா மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளிடம் போரிடும் பொழுது மாண்டனர் என்று சொல்லலாமே. மேலும் தாங்கள் இலங்கைக்கு உதவுவது நேரிடையாக தெரிந்தும் விடுமே... இரண்டையும் தடுக்கவே இந்நடவடிக்கை)
இந்த வருட இந்திய நிதி அறிக்கையில் கூட இந்திய இராணுவத்திற்கு முப்பத்தி இரண்டு சதவிகிதம் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது-- நிச்சியமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் வராது( காரணம் இந்திய - பாகிஸ்தான் போர் என்பதே இரு நாடு மக்களையும் ஏமாற்றி ஒரு விதமான பகை உணர்வை தூண்டிவிட்டு அரசியல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அல்லது என்றோ நடந்த போர் இன்றும் புகைந்துகொண்டிருக்கிறது என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்து ஏமாற்றும் வேலையே அன்றி வேறில்லை) சீனா விற்கும் இந்தியாவிற்கும் கூட பெரிய பகை ஒன்றும் இப்பொழுது இல்லை.
பின்னர் எதற்காக இத்துணை கோடிகள்( சரியாக சொன்னால் ஒரு இலட்சத்து முப்பத்தி ஓராயிரம் கோடி இந்திய ரூபாய்கள் ) இராணுவத்திற்காக ஒதுக்குகிறார்கள்?
காரணம் இலங்கையில் நடந்து வரும் போரில் தமிழர்களை ( புலிகள் என்று தனியாக கூறினாலும் தமிழர்கள் என்று கூறினாலும் இரண்டும் ஒன்று தான்.) அழித்து ஒழித்து விட்டு அதன் மூலம் சுண்டைக்காய் நாடான இலங்கையின் கருனைபார்வைகாதகதான் அன்றி வேறில்லை.
(எதற்காக இலங்கையின் கருணை பார்வை வேண்டும் அல்லது இந்தியா கண்மூடித்தனமாக சிங்களவர்க்கு உதவுவது ஏன்? அதைவிட கண்மூடித்தனமாக தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஏன்? என்பன போன்ற விடையங்களை பிறிதொரு முறை அலசலாம். சிங்களவர்களை ஆதரிப்பதற்கு, புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு ஈழதமிழினதையே அழிக்கும் இந்திய பார்ப்பனிய காங்கிரஸ் அரசு, அதற்காக கூறும் காரணத்தை பார்போம்)
இந்திய மைய அரசும், அதை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியினரும் தமிழகத்தை சேர்ந்த ஈனதமிழர்களான காங்கிரஸ் வாதிகளும் கூறும் காரணம் : "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்களை மறக்க மாட்டோம் மன்னிக்கமாட்டோம்"
From Thamizhan Sundara |
From Thamizhan Sundara |
ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் சென்ற அக்ரம, அராஜகப்படை ஆறு ஆயிரத்திற்கும் மேலான அப்பாவி தமிழர்களை கொலை செய்ததை நாங்கள் எப்படி மறப்பது, எப்படி மன்னிப்பது?
எங்கள் சகோதரிகள், தாய்கள் கர்ப்பழிக்கப்பட்டதை, கொலை செய்யப்பட்டதை துன்புருதப்பட்டதை, அவர்களின் பிறப்புறுப்புகள் கிழிக்கப்பட்டதை, மார்புகள் கிழிக்கப்பட்டதை , கர்பிணிகளின் வயிறு கிழிக்கப்பட்டதை, வெறும் ஒரு சிகரெட் பாக்கெட் பந்தயத்திற்காக நிறைமாத கர்பிணியாக இருந்த என் சகோதரியின் வயிறு கிழிக்க பட்டு வயிற்றினுள் இருந்த சிசு ஆனா பெண்ணா என்று "கண்டறியப்பட்டதை" எப்படி மறப்போம் எப்படி மன்னிப்போம்..... (இப்படி கூறுவதன் மூலம் இதற்காக தான் "புலிகள்" ராஜீவை கொன்றார்கள் என்று நான் கூறவில்லை.)
ராஜீவ் காந்தி மறைவுக்கு காங்கிரஸ் வாதிகள் போல நாங்களும் வருந்திநோமே, எங்கள் சொந்தங்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டனரே. அதற்காக நீங்கள் வருந்தினால் ஈழம் என்றைக்கோ மலர்ந்திருக்குமே... எம் உறவுகள் சிலரேனும் காபாற்றப்படிருப்பரே...
ராஜீவ் காந்தியாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் ஒருவன் செத்தால் போவது ஒரு உயிர் தானே....
அப்படியிருக்க ராஜீவ் காந்தியின் கொலை ஒன்றையே காரணமாக வைத்து ஒரு
இந்த உலகின் மாபெரும் மூத்தகுடி இனத்தையே அழிக்க துணிந்திருக்கும் இவர்களின் கொடுர நாசவேலை இந்த பேரண்டம் இது வரை பார்த்திறாதது.
அப்படி உண்மையிலேயே இராஜிவ் காந்தியை கொன்றது புலிகள் தான் என்றால் அல்லது புலிகள் மட்டும் தான் என்றால், அதற்காகத்தான் புலிகள் பழிவாங்கப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கபடுகிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட,
From Thamizhan Sundara |
வீர் சாவர்கர் :
From Thamizhan Sundara |
கோட்சே கொல்லபட்டன் வீர் சாவர்கரும் தண்டனை அனுபவித்தான். அவ்வளவு தானே..
From Thamizhan Sundara |
சர்வர்கரையும் அந்த கழிசடை இந்து இயக்கத்தையும் என்ன செய்தார்கள்?
அதே இயக்கத்தின் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சி செய்ய வந்ததே. அப்படி ஆட்சி செய்ய வந்த பொழுது அதே வீர சாவர்கரின் சிலையை பாராளுமன்ற முகப்பிலேயே நிறுவினரே...
From Thamizhan Sundara |
பி ஜெ பி இந்திய தேசத்தை 10 ஆண்டுகள் ஆண்டனரே...
இன்னும் இந்தியாவில் பல பரிமாணங்களில் அரசியல் அராஜகம் செய்துகொண்டிருக்கின்றனரே...
இதுவெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது தேசபிதா, மகாத்மா, மோகன் தாஸ் கரம்சந்து காந்தியின் கொலை அங்கிகரிக்கப்பட்டதாக தானே தெரிகிறது?
மேலும் தனது சொந்த சீக்கிய பாது காவலர்களாலேயே கண்மூடித்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டார் அன்னை இந்திரா காந்தி...
From Thamizhan Sundara |
அன்னை இந்திரா கொல்லப்பட்ட இடம்:
From Thamizhan Sundara |
அல்லது இந்திய இராணுவத்தில் இருக்கும் சீக்கிய படையணியை களைதீர்களா?
அவர்கள் மீது போர் தொடுத்தீர்களா?
ராஜீவ் காந்தியின் தலைமையில் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது, 3000 க்கும் அதிகமான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
அவ்வளவு தானே....
இது அனைத்தும் முடிந்த பின்னர், அந்த மாபாதக கொலையை செய்த சத்வந்த் சிங்க் மற்றும் beant சிங்க் ஆகிய இரண்டு சீக்கியர்களின் குடும்பங்களையும் (குருத்வாரா ப்ரபஞ்சக்கமிட்டி என்று அழைக்கபடுகிற) சீக்கிய இனத்தின் பாதுகாவல் இயக்கம் தத்து எடுத்துக்கொண்டது...அந்த இரண்டு கொலைகாரர்களையும் சீக்கிய இன குருக்கள் என்று கூறியது.
அக்கொலையை செய்த இருவரில் ஒருவருடைய மனைவி பின்பு வந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள்(அப்பொழுது அந்த வாக்கு வித்தியாசம் ஒரு சாதனை, சரியான எண்ணிக்கை மறந்துவிட்டேன்) வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திரா காந்தி மகன் ராஜீவ் காந்தி எதிரில் பாராளுமன்றத்தில் அமர்ந்தாரே ..
அதே இனத்தை சேர்ந்த மன் மோகன் சிங் பிரதமாராக இருக்கிறாரே...
அப்படி என்றால் அன்னை இந்திரா காந்தி கொலை அங்கீகரிக்கப்பட்டது என்று தானே பொருள்?
ஒரு தேசபிதவையும் ஒரு அன்னை இந்திரா காந்தியையும் விடவா ராஜீவ் காந்தி பெரியவர்?
வேறு பல காரணங்களால், இந்துத்துவா பேசும் பார்பன ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும் கூட சீக்கிய இனம் பழிவாங்கப்படவேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை...
ஆனால் தமிழன் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறான், ஏன் வஞ்சிக்கப்படுகிறான் என்பது தான் இப்பொழுது எங்கள் கேள்வி,,,,
உண்மையிலேயே இராஜிவ் காந்தி கொலைக்காகத்தான் இலங்கையில் புலிகளை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு ஒட்டு மொத தமிழினத்தையும் அழித்துக்கொண்டிருக்கும் இந்திய இராணுவமே, அரசாங்கமே, பார்பனியமே....
உண்மையில் ராஜீவ் காந்தியை கொன்றது புலிகள் தானா?
இங்கே காங்கிரஸ் வாதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் ஈனப்பிறவிகளே, நீங்கள் அனைவரும் உண்மையிலே ராஜீவ் காந்தி கொலைக்காக வருத்தப்படுகிறீர்களா?
இல்லை என்றே சொல்லதோன்றுகிறது...
காரணங்கள்....
ராஜீவ் காந்தியின் மரணம் நடந்த பிறகு விசாரணை வேகமாக நடந்து வந்தது போல இருந்த பொழுது, சுப்ரமணிய சாமியையும் சந்திர சாமியையும் விசாரணைக்கு அழைத்தார்கள் ஜெயின் கமிஷன் அதிகாரிகள், அதன் பின்னர் அந்த விசாரணை நடை பெற்றதாக தெரிய வில்லையே...
வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லையே...
ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வருகிறார் என்று தெரிந்தும் கூட அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ்வாதிகள் பலர் செல்லவில்லையே ஏன்?
அப்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த அம்மாதிமுக கட்சி தலைவியான புரட்சிதலைவி ஏன் விமான நிலையம் செல்லவில்லை?
திருப்பெரும்புதூர் கூட்டதிற்கு கூட "அம்மா" செல்லவில்லையே ஏன்?
மற்றொரு ஊரில் பிரச்சாரம் முடித்து வரும் வழியில் பாதியில் திரும்பி சென்றது ஏன்?
திருபெரும்புதூரில் தனது தாய் இந்திரா அவர்களின் சிலையை ராஜீவ் காந்தி அவர்கள் வணங்கி மாலையிட்ட பொழுது கூட அருகில் இறந்த சில தலைவர்கள் சரியாக தாணு என்ற அந்த பெண் அருகில் வரும்பொழுது இல்லையே ஏன்?
சரியாக வெடி வெடிப்பதற்கு சில நொடிகள் வரை அருகில் இருந்த ஜெயந்தி நடராஜனையும் மூப்பனார் அவர்கள் அழைத்துக்கொண்டார், அது ஏன்?
குண்டு வெடித்த பொழுது இராஜிவ் அவர்களுடன் பதினாறு அப்பாவி காவல் துறையினர் இறந்தனர் கூட ஒரு புகைப்படகார ஹரிபாபு இறந்தார் ஆனால் ஒரு காங்கிரஸ் தலைவன் என்ன, தொண்டன் கூட சாகவில்லையே அது எப்படி?
இது இப்படி இருக்க...
ராஜீவ் காந்தியை கொலை செய்துவிட்டு தப்பித்து பெங்களூர் வந்த ஒற்றைக்கண் சிவராசன், சுபா, முருகன், நளினி, பேரறிவாளன் போன்ற "கொலையாளிகள்" என்று அழைக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுத்தாக கைது செய்யப்பட்டு பின்னர் 1998 இல் விடுவிக்கப்பட்ட பெங்களூர் ரெங்கநாத் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இதழுக்கு அளித்துள்ள பெட்டியில் மேலும் பல உண்மைகளை சொல்லியிருக்கிறார்....
அப்பொழுது ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக அந்த உரையாடல் இவர் செவியில் விழுந்ததாம், அதில் சிவராசன் "சந்திராசாமி" என்று ஏதோ சொன்னதாக கேட்க்க, பேசிமுடித்து திரும்பவும் இல்லம் வரும் வேளையில் ரெங்கநாத் சிவராசனிடம் "சந்திரசாமி என்று ஏதோ சொன்னீர்களே.. அது என்ன?" என்று கேட்க, அதற்க்கு சிவராசன் "இந்த ராஜீவ் காந்தி கொலையை செய்ய சொன்னதே சந்திரசாமி தான், தனு கட்டிக்கொண்டு வந்த அந்த belt மற்றும் அந்த வெடிகுண்டு ஆகியவை வடக்கே ஹரித்வாரில் இருக்கும் சந்திரசாமி ஆசிரமத்தில் வைத்து அவரால் புஜை செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது தான் என்றும் அந்த பெல்ட் மற்றும் போம் கொடுக்கும் பொழுது " தமிழ்நாட்டில் நீங்கள் செய்யப்போகும் வேலை முழு வெற்றி" என்று சந்திராசாமி கூறினான்" என்று சொல்லி சிவராசன் சிரித்ததாக அந்த பெட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் கைது செய்யப்பட்ட பிறகு தன்னை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவின் தலைவனான DIG கார்த்திகேயன் அவர்களிடம் ராஜீவ் காந்தியை கொன்றது சந்திராசாமி தான் என்று பெங்களுரு ரெங்கநாத் கூறிய பொழுது கார்த்திகேயன் ரெங்கநாத்தை கடுமையாக தாக்கினானாம். மேலும் துப்பாக்கி எடுத்து மிரட்டி "சந்திராசாமி பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னால், கோடியக்கரை சண்முகம் கதி தான் உனக்கும் வரும். இனிமேல் அதை பற்றி வெளியில் சொல்லாதே" என்று மிரட்டினானாம் அந்த பார்பான் DIG கார்த்திகேயன்.
(கோடியக்கரை சண்முகம் என்பவர் ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழுவால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சில நாட்களில் "காவலில் தூக்கு மாட்டி இறந்ததாக" கூறப்பட்டது.)
ஆக மொத்தத்தில் ராஜீவ் காந்தி கொலை எனபது அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ எ மற்ற்யும் இந்திய உளவு நிறுவனமான "ரா"(RAW) உத்தரவின் பெயரில், காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் சில முக்கிய இந்திய அதிகாரிகளுக்கும் தெரிந்து சுப்ரமணிய சாமி மற்றும் சந்திரசாமி என்கிற இருவரின் மேற்பார்வையில் தான் நடைபெற்றது என்பது ஊர்ஜிதமாகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படியே "கொலை செய்வதை விட கொலை செய்ய தூண்டுவது தான் மிகபெரிய குற்றம் என்றும் ஆதலால் கொலைசெய்தவனை விட, கொலை செய்ய தூண்டியவனுக்கு தான் தண்டனை அதிகம் என்றும் இருக்கிறது.
ஒரு சுப்ரமணிய சாமி, சந்திராசாமி, மே மாதம் 21, 1991 அன்று கொலை நடந்த பொழுது அவர் அருகில் இல்லாமல் போன தமிழக காங்கிரஸ் காரர்கள், அன்று அவருடன் சென்னை பயணிக்காமல் போன ராஜிவின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் ஆகிய யாருமே இன்னும் முழுமையாக ஏன் விசாரிக்கப்படவில்லை?, ஏன் நார்கோ அனலிசிஸ் டெஸ்ட் என்ற உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை? ஏன் ஜெயின் கமிஷன் விசாரணையின் வெள்ளை அறிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை?
ஜெயின் கமிஷன் சுப்ரமணியசாமி மற்றும் சந்திராசாமி ஆகிய இருவரயுயும் விசாரித்தபிறகு அந்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெறவில்லையே ஏன்?
புலிகள் ராஜிவை கொலை செய்தார்கள் என்றும் அதற்கான "புலிகளின் காரணத்தை" இவர்கள் இப்படியாகத்தான் கூறிகிறார்கள் :"இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அக்கிரமங்களுக்கு பதிலடியாகத்தான் இந்த ராஜீவ் கொலை " என்று.. மீண்டும் படிக்கவும் புலிகள் தரப்பில் இது பற்றி "நாங்கள் தான், புலிகள் தான் இக்கொலையை செய்தோம் என்று எந்த செய்தியும் வரவில்லை, புலிகள் "சார்பாக" இந்தியாவிலிருந்து தான் இந்த "ஒப்புதல்" வந்திருக்கிறது.
தமிழர்கள் வீரமறவர்கள், குற்றம் செய்தால் ஒப்புக்கொளும் நெஞ்சுரம் எங்களுக்கு உள்ளது, செய்திருந்தால் தான் ஒப்புக்கொள்ள முடியும்.
"As far as that event is concerned...I would say it is a great tragedy... a monumental historical tragedy... which we deeply regret, and we call upon the government of India and people of India to be magnanimous to put the past behind... and to approach the ethnic question in a different perspective," Balasingham said.
Asked if the LTTE could promise that it would not commit such acts again, Balasingham added: "We have made pledges to the government of India that under no circumstance will we act against the interests of the government of India."
நன்றி : the times of india.
இப்படி இருக்க ராஜிவை கொலை செய்தது விடுதலை புலிகள் தான் என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
From Rajiv |
From Rajiv |
தமிழ் இனத்தையே அழிக்க என்ன தான் காரணம்?
உண்மைகள் எப்பொழுது உண்மையாக வெளிவரும்????
ஈழத்தில் என்று விடிவு பிறக்கும்?
அது என்று தணியும்?
என்று தணியும் எங்கள் சுதந்திர ஈழ தாகம்?