Thursday, April 30, 2009

சிங்கள இனவெறி - ஜ.நா எடுத்த இரகசிய படங்கள்

ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல்

சிங்கள இனவெறி அரசின் தமிழ் இன அழிப்பிற்கு, சாட்சியம் இல்லா போர்.(WAR WITHOUT WITNESS) என்று தான் பெயர் வைத்திருந்தது.... ஆனால் ஐ நா வில் தொலைத்தொடர்பு செயற்க்கைக்கோள் மூலமாக இபொழுது இலங்கையின் குட்டு வெளிபட்டிருக்கிறது....

இடம் பெயரும் மக்கள், கன்னி வெடிகளை தவிர்ப்பதற்காக வருசையாக செல்வதை இப்படத்தில் காணலாம்,
UNOSAT 6

முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில 26-03-2009 அன்று இருந்த 800 க்கும் அதிகமான தற்காலிக குடியிருப்புகள் 19-04-2009 அன்று காணவில்லை....
UNOSAT 5

ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

எறிகணை எறிகுண்டு தாக்குதல் நடந்த இடங்கள் ....
UNOSAT 4
ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்டுள்ள சாலையும், மண் அரண்களும், எறிகணைகள் விழுந்து பள்ளமான இடங்களையும் இந்த படம் காட்டுகிறது...
UNOSAT 3

புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

கடும் விமானத்தாக்குதலால் ஏற்பட்டிருப்பதாக கருதப்படும் பாரிய குழி
UNOSAT 2

இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு குரியிட்டுக்குகாட்டப்பட்டுள்ள இடங்களில் மிகபெரிய விமான எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டு பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்
UNOSAT 1

Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு



வன்னியிலிருந்து இலங்கை படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் இனி மக்கள் மறுவாழ்வுக்கான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் கருணாநிதியின் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு வற்புறுத்தியது.இதைத் தொடர்ந்து போர் முனையில் படைகள் வாபஸ் பெறப்படும் என்றும், அதே நேரம் தற்காப்புக்கான தாக்குதல்கள் தொடரும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து சிஎன்என் நிருபர் தெரிவித்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துதல், விமானத் தாக்குதல் அடியோடு நிறுத்தப்படும் என்றும், சிறு துப்பாக்கிகள் மட்டும் தற்காப்புக்கா பிரயோகிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் எங்களது படையினர் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இலங்கை கூறவில்லை. புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் தொடரலாம்.
ஆனால், இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது திமுகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தனை காலம் காத்திருந்துவிட்டு தேர்தல் வரும்போது தான் இந்த உண்ணாவிரதத்தை நடத்தி தமிழர்களை காக்க முயன்றிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் திமுகவை நோக்கி எழுந்துள்ளது.
அதே போல இலங்கையை நெருக்க முடியும் என்ற நிலை இருந்தும் மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தது என்ற கேள்வியும் காங்கிரசை நோக்கி எழுந்துள்ளது.
இப்போதைக்கு திமுகவும்-காங்கிரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், தேர்தல் நேரத்தில் இலங்கையில் மீண்டும் தாக்குதல் என்ற தகவல் வந்தால் அது இந்தக் கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பது நிச்சயம்.
எனவே வாக்குப் பதிவு முடியும் வரை, தாக்குதல் அடியோடு இருக்காது என்று நம்பப்படுகிறது.


இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு


வன்னியிலிருந்து இலங்கை படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் இனி மக்கள் மறுவாழ்வுக்கான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் கருணாநிதியின் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு வற்புறுத்தியது.இதைத் தொடர்ந்து போர் முனையில் படைகள் வாபஸ் பெறப்படும் என்றும், அதே நேரம் தற்காப்புக்கான தாக்குதல்கள் தொடரும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து சிஎன்என் நிருபர் தெரிவித்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துதல், விமானத் தாக்குதல் அடியோடு நிறுத்தப்படும் என்றும், சிறு துப்பாக்கிகள் மட்டும் தற்காப்புக்கா பிரயோகிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் எங்களது படையினர் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இலங்கை கூறவில்லை. புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் தொடரலாம்.
ஆனால், இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது திமுகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தனை காலம் காத்திருந்துவிட்டு தேர்தல் வரும்போது தான் இந்த உண்ணாவிரதத்தை நடத்தி தமிழர்களை காக்க முயன்றிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் திமுகவை நோக்கி எழுந்துள்ளது.
அதே போல இலங்கையை நெருக்க முடியும் என்ற நிலை இருந்தும் மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தது என்ற கேள்வியும் காங்கிரசை நோக்கி எழுந்துள்ளது.
இப்போதைக்கு திமுகவும்-காங்கிரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், தேர்தல் நேரத்தில் இலங்கையில் மீண்டும் தாக்குதல் என்ற தகவல் வந்தால் அது இந்தக் கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பது நிச்சயம்.
எனவே வாக்குப் பதிவு முடியும் வரை, தாக்குதல் அடியோடு இருக்காது என்று நம்பப்படுகிறது.

Tuesday, April 21, 2009

ஈழத்தில் இன்று மட்டும் (20/04/2009) 1500 க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்...

ஈழத்தில் இன்று மட்டும் (20/04/2009) 1500 க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்...

பல்லாயிரம் தமிழர்கள் படுகாயம் அடைந்தனர்....

இந்த கோரகாட்சிகளில் சில....



Saturday, April 18, 2009

தேசிய தலைவர் பற்றி அருத்த்தந்தை ஜகத் கஸ்பார்

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம்

Photobucket

வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.

Photobucket

மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.

பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார். என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'. உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக் கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.

உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.

உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், "பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார். ""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.

புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரி தாகத் தெரியாது. வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின் னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்க ளாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட் டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.

""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை. உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக் கிறேன்.''

அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.

கடந்த இதழைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் கவலையோடு கேட்டனர். இவற்றையெல்லாம் இப்போது சொல்வ தால் உங்களுக்கு நாளை பிரச்சனைகள் வராதா என்று. நானோ, காலங்கடந்து எழுதுகிறேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறேன். எதைப்பற்றிய அச்சமும் எனக்கு இன்று இல்லை. நான் தமிழன், எனது இனம் உலகின் மிகப்பழமையான, உயர்ந்த பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட ஒப்பிலா இலக்கியங்கள் படைத்த, சுயமரியாதை கொண்ட, எட்டுகோடி உயிர்களைக்கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய மக்கள் இனம் என் இனம். என் இனத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றழித்து, இன்று மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களை முல்லைத்தீவில் உயிரோடு புதைத்துவரும் கிராதக சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினரும், பெரும் உலக சக்திகளும் என் இனம் சார்ந்த அம்மக்களின் போராட்டத்தை "பயங்கரவாதம்' என முத்திரை குத்துவது என் இனத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும். குறைந்தபட்சம் என்னால் ஆனது அச்சமில்லா எதிர்குரல். ஒலிக்கும் எது வரினும்.

"இந்தியாவை ஏன் நீங்கள் பகைத்துக்கொண்டீர்கள்?' என்ற கேள்வியைத் தொடர்ந்து "கலைஞரையும் பல தருணங்களில் நீங்கள் காயப்படுத்தினீர்களே...' என்றேன்.

""இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் கலைஞர். நாங்கள் எல்லோரும் கலைஞரின் உரைகள் கேட்டு தமிழுணர்வில் ஊறியவர்கள். யாழ்ப்பாணம் சென்று பாருங்கள் கலைஞரின் உரைகள் அடங்கிய கேசட்டுகள் இல்லாத கடைகளை நீங்கள் பார்க்க முடியாது. சில சூழ்நிலைகள் அவர் மனம் வருந்தும்படி அமைந்திருக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரிய தலைவர். நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்...

(தொடரும்)

-நன்றி : http://tamilskynews.com/

Friday, April 17, 2009

Indians against genocide